Tuesday, January 17, 2017

Memories Of A Machine (மனிதனின் பாலியல் நடத்தைச்சிக்கல்கள்)

"மனிதனுடைய பாலியல் நடத்தை இவ்வளவு
சிக்கலானதா ?"

சுய இன்பம் அனுபவித்துக்கொண்டிருக்கும் வயது வந்த ஒரு பெண் அவளது பெற்றோர் பார்வைக்கு வந்தால் உடனடியாக அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கையாக எது இருக்கும்? திருமணம்??

இதுவே ஒரு ஆண் சுயஇன்பம் அனுபவிப்பதனை பெற்றோர் பார்வையில் மட்டுமல்ல சமூகப்பார்வையில் கூட தவறாக தெரியாது இல்லையா?

சம வயதுடைய ஒரு ஆணும் பெண்ணும் முதன் முதலில் காதல் வயப்பட்ட நிலையில் நேரில் சந்தித்து உடலியல் ரீதியாக ஸ்பரிசித்துக்கொள்கையில் அந்த பெண் தன் பாலியல் விருப்பங்களை வெளிப்பட கூறுகையில் அந்த ஆணிடம் இருந்து வெளிப்படும் வெறுப்பு நிலை,அந்தப்பெண்ணை காமவெறி கொண்ட அருவெறுப்பானவளாக நினைத்து அவளை அவமானப்படுத்திவிட வைக்கிறது,இதனையே அந்த ஆண்தன்பாலியல் விருப்பங்களை வெளிப்படுத்தினால் ஒரு சாதாரணமான ஒரு விடயம் இல்லையா?

பாலியல் கல்வி பாடசாலைகளில் கட்டாயமான ஒரு பாடமாக நிறுவாமல் பின்வாங்க காரணம் என்னவாக இருக்கும்?

மேலே உள்ள கேள்விகள் தோன்ற காரணமாக ஒன்பது நிமிடத்தை கொண்ட,ஒரேயொரு கதாபாத்திரம் நடித்திருக்கும் ஒரே ஒரு ஷாட்டில் எடுக்கப்பட் ட ஒரு குறுந்திரைப்படம் காரணம் என்றால் நம்ப முடியுமா? யூடியூப் வலைத்தளத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பரபரப்பாகவும் பல்வேறு சர்ச்சைகளையும்,பல்வேறு விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ள ஒரு குறுந்திரைப்படம் "Memories of a Machine". இந்த திரைப்படத்தின் முன் பின்னால் காண்பிக்கப்படும் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரின் பெயர்களை நீக்கிவிட்டு இதனை வெறுமனே காணொளி போல பார்க்க நேருமாயின் நான்கூட பின்வருமாறு கூறியிருப்பேன் என்று நினைக்கிறேன்."இது கணவன் மனைவி இருவருக்கிடையில் நிகழும் அந்தரங்க உரையாடலை கணவன் கேமராவில் பதிவு செய்து மனைவிக்குத்தெரியாமல் வேண்டும் என்றே பதிவிட்டான் ."அந்த அளவுக்கு யதார்த்தமான நடிப்பை கொண்டுவந்துள்ளார் இயக்குநர் Shailaja Padindala.இயக்குனரை மிகச்சரியாகப்புரிந்து கொண்டவர் மலையாள நடிகை KaniKusrutiயை கூறலாம்.மொத்தப்படமும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டிருப்பதால் அந்த நடிகை கதை சொல்லும்போது point of view இல் நாமே கதையை கேட்பது போன்ற உணர்வை ஏற்படுத்தி விடுகின்றது.இது கேமரா மேன் Sandeep.PS இன் திறன் என்றே கூறலாம்.


இக்குறுந்திரைப்படமானது,திருமணமான ஒரு பெண் தன் கணவனிடம் ' எவ்வாறு தான் முதல் முதலில் பாலியல் இன்பத்தை அனுபவித்தார் அல்லது பாலியலைப் புரிந்து கொண்டார் ? என்பது குறித்த கதையே இது.இத்திரைப்படத்தில் கதாநாயகி தான் 8 வயதாக இருக்கும் போது,தன்னை வயது வந்த வேலையாள் தொட்டது பற்றி எவ்வித பதட்டமும் இன்றி சாதாரணமாக பேசுகிறார்.இந்த சம்பவம் பாலியல் வன்முறையை ஊக்குவிப்பதாகவும் சிறுவர்மீதான பாலியல் இச்சை கொண்டவர்கள் மீது கடினமற்றதன்மையை உருவாக்கி இருப்பதாகவும் பல்வேறு பக்கங்களில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்தன.இதைப்பற்றி இயக்குநரிடம் வினவயில் அவர்கூறும் பதில் நானும் ஒரு பெண் என்ற வகையில் பெண்கள் ,சிறுவர்பாலியல் வன்முறைக்கு நானும் எதிரியே.மேலும் அது தொடர்பான எந்தவிதமான கற்பனைகளையும் உருவாக்கும் உத்தேசமும் இல்லை."ஒரு சிறுமி பாலியல் தொடர்பான சமூக விதிமுறை மற்றும் கலாச்சார விழுமியங்களை குடும்பத்திலிருந்து அறிந்து அதனை எதிர்கொள்ள முன்னர்,அந்தச்சிறுமியின் உணர்வு எவ்வாறு இருக்கும்? என்பதை சித்தரிக்கும் முயற்சியே" இத்திரைப்படம்.

நான் இவ்விடத்தில் ஒரு வினாவை முன்வைக்கிறேன்,நீங்கள் பார்க்கும் திரைப்படங்களை பின்பற்றவேண்டும் என்ற கோட்ப்பாடு எங்காவது உங்கள் மீது வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டுள்ளதா? திரைப்படங்களை புரிந்து கொள்ள தெரியாதவர்கள் யாருக்கு சாதகம் பாதகம் பார்த்து விமர்சிக்கின்றனர் என்றுதான் எனக்கு புரியவில்லை.என்னைப்பொறுத்தவரையில் இங்கே இயக்குநர்Shailaja Padindala என்ன விடயத்தை சொல்ல நினைத்தாரோ அதை மட்டுமே தெளிவுற கூறி இருக்கிறார்.மேலும்,"ஒரு பண்பட்ட சமூகத்தில் எதனைப் பேச வேண்டும்?,எதனைப்பற்றி உரையாடல்களை மேற்கொள்ள வேண்டும்? என்று காலங்காலமாக சமூகத்தில் அனுமதிக்கப்பட்டு வந்துள்ளதோ அதற்கு சற்று புறம்பாக சில கேள்விகளை மறைமுகமாக எழுப்பி ஒரு சிறிய புரட்சியை உருவாக்கி சிந்திக்க வைத்துள்ளார்.

இன்றய உலகில் மனிதர்கள் உண்மையாகவும் யதார்த்தமாகவும் இருப்பது மிகவும் அரிதாகவே உள்ளது.சில விடயங்கள் பற்றி சிலருக்கு தெளிவு இருக்கும் போது அதனுடைய தாக்கத்தை சகித்துக்கொள்வது சமூகத்திற்கு கடினமானதாகவே உள்ளது.ஒவ்வொரு மனிதனுடைய வாழ்விலும் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பது பற்றி இலகுவாக வெளிப்படுத்த முயற்சிக்கும் இந்த படத்தை சுற்றி ஏன் பெருவாரியான பதற்ற நிலை காணப்படுகிறது??

இந்த இடத்தில் சமூகத்தவர்களின்,பார்வையாளர்களின் சிக்கல் என்னவென்றால்,அந்தப்பெண் பாதிக்கப்பட்ட அல்லது வன்முறைக்குள்ளாக்கப்பட்ட ஒரு பெண் பேசுவது போல வெறுப்படைந்து,அழுதுகொண்டு,ஆவேசம் கொண்டு பேசவில்லை.மாறாக சுய இன்பம் காணுதல் பற்றி ஒளிவு மறைவின்றி நகைச்சுவையாக பேசுகிறாள்.இங்கு சமூக மக்கள் ஏன் கிளர்ச்சிக்குள்ளாகி கோபம் கொள்கின்றனர் என்றால்,வெவ்வேறு நபர்களுடன்,விடயங்களுடன்,தங்களது நடைமுறை வாழ்வுடன் இணைத்துப்பார்த்து கூச்சமும் அருவருப்பும் கொள்கின்றனர்.இங்கு மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டிய விடயம் என்னவெனில் இது சரி பிழை என்ற விவாதத்திற்குரிய விடயம் அல்ல.இது வெளிப்படையாக கூறப்பட்டுள்ள உண்மையின் நிழல்களாகவே உள்ளது.மேலும் இது (pedophile) குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் மீதான இச்சையை நியாயப்படுத்தும் ஒரு படமும் அல்ல. என்னை பொறுத்தமட்டில் "இது மனிதனுடைய பாலியல் நடத்தை எவ்வளவு சிக்கலானது என்பது பற்றி புரிந்து கொள்வதாகும்"

மனிதர்கள் வித்தியாசமானவர்கள்.ஒவ்வொருவரது அனுபவமும் அதனை அவர்கள் கூறுகின்ற விதமும் யாரையும் தாழ்த்தி விடாது.பிறரின் பார்வையில் நாம் யாரென்பதில் எந்த நிஜமும் இல்லை.அப்படி இருப்பதற்காக சுய விருப்பங்களை மறைத்து போலியான வேஷங்களைப் போட்டுக்கொண்டு நாம் சாதித்து விட போவது ஒன்றும் இல்லை.

இன்னும் ஒரு முறை இயக்குநர் Shailaja Padindala வின் தெளிவினையும் தைரியத்தையும் மலையாள நடிகை Kani Kusruti யின் இயலப்பான யதார்த்தமான நடிப்பையும் கேமரா மேன் Sandeep.PS ஐயும் பாராட்டிடாமல் இருக்க முடியவில்லை.


- அத்தியா -

5 comments:

  1. படத்தை சமூகம் எதிர்கொள்ளும் விதம் பற்றிய விமர்சனமாக உங்களின் இக்கட்டுரையைக் கொள்கிறேன். படம் லார்ஸ் வார் டையரின் வரிகளுடன் துவங்கியதை கவனுத்திருப்பீர் என நினைக்கிறேன். படத்தில் 'நிம்ஃபோமேனியாக்' படத்தின் டி.வி.டி கவரும் கிடக்கிறது. நிம்ஃபோமேனியாக் படம் அதீத காமத்தை இயல்பு தளத்துக்கு கொண்டு வரும். இக்குறும்படத்தில் நிகழ்வது அதே போலொரு உடைவு... (கலச்சார கதறல்களுக்கு செவி மடுக்க வேண்டாம்).. அந்த பியூன் உடனான உறவை சொல்லுமிடத்தில் நிகழ்கிறது அவ்வுடைவு... அதீதம், தவறு என்பவை இயற்கையின் முன் இயல்பாகும் உடைவு அவ்விடத்தில் நிகழ்கிறது.
    படத்தை அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி

    ReplyDelete
  2. Nice article.Frankly speaking ppl r afraid and shy to talk on these subject with friends too.Many tease instead of giving solution,atleast guiding them to a good councellor will be much helpful.We r living in a society where ppl judge us immediately and its not possible for everyone to live their life boldly without bothering others.Teaching basic anatomy to students with good councellor will help a lot - Murali Ganapathi

    ReplyDelete

Blog Archive

Followers

About Me

My photo
"வாழ்வெனும் கங்குலை புரிந்து கொள்ளத்துடிக்கும் மின்மினி இவள்"
Copyright © மின்மினி |