Tuesday, May 23, 2017

நீலப்படங்கள் என்பவை உலகத்தின் இறுதிச்சீரழிவைப் போன்றவை - ஓர் எதிர்வினை

முரண்படும் கருத்துக்களுக்கான என் எதிர்வினை

"நீலப்படங்கள் என்பவை உலகத்தின் இறுதிச்சீரழிவைப் போன்றவை" என்னும் தலைப்பில் பிரான்சில் இருந்து வெளியாகும் "ஆக்காட்டி" இதழில் மொழிபெயர்ப்புக்கட்டுரை ஒன்றை வாசிக்க நேர்ந்தது.இந்த கட்டுரையை ஈழத்து இலக்கியச்செயற்பாட்டாளர் மிஹாத் Mihad Mihad சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்து முகப்புத்தகத்தில் சிறிதுகாலத்திற்கு முன்னர் பதிவிட்டு இருந்தார்.வாசித்து வியந்து போன கட்டுரை எனலாம்.இதன் மூலப்பிரதி அமெரிக்க ஊடகவியலாளரான(Chris Hedges) க்ரிஷ் ஹெட்ஜஸ் இனால் எழுதப்பட்டது.இருந்தாலும் கருத்தியல் ரீதியாக மட்டுமல்லாது நடைமுறைச்சாத்திய முரண்பாட்டு ரீதியாக சில வினாக்கள் என்னுள் எழுந்தன.அதனை கட்டுரையுடன் தொடர்புபடுத்தி முன்வைத்துவிடுகிறேன்.
வழக்கமாக பெண்களுக்கு எங்கே அநீதி இழைக்கப்படுகிறது? என்று சிலர் அவர்களுக்காக பரிந்து பேசவே முன்வருவதனை காணக்கூடியதாக உள்ளது.அதாவது "பெண்கள் பாவப்பட்ட ஜென்மம்" என்னும் உளவியலை தோற்றுவிப்பதாக இருக்கும்.அது எல்லா இடத்திற்கும் பொருந்துமா என்பது சற்று சிக்கலானது.ஆபாசத்திரைபட நடிககைகளாக இருக்கும் பெண்கள் பாவப்பட்டவர்கள்,அறியாமையால் இந்த ஆபாச சினிமாத்துறையில் இருந்துகொண்டு மிகுந்த துன்பப்பட்டு இருக்கின்றனர் என்னும் தோரணையிலேயே இந்த கட்டுரை நகர்ந்து செல்கின்றது.

// (Fifty Shades Of Grey) பிப்டி ஷேட்ஸ் ஓப் கிரே எனும் நூல் உடல்களுக்கிடையில் நிகழ்த்தப்படும் கொடுஞ் செயல்களைக் கொண்டாட்டக் கருவாகக் கொண்டது. இந்நூலிலுள்ளவை பின்னர் சினிமாவாகவும் உருவாக்கப்பட்டது. இவை தீவிர ஆபாச சினிமாவினதும் உலகளாவிய முதலாளித்துவத்தின் ஆதரவோடும் அமெரிக்க நோய்மைக் கலாசார அபிலாசைகளை எடுத்துரைக்கிறது. இத்திரைப்படம் பெண்ணை சக மனிதனாக நோக்கும் பழக்கத்தை மறுத்து விடும் கொண்டாட்டங்களை உருவாக்குகிறது. இது வெறுமையான கருணையினாலும் அத்துமீறிய காதலாகவும் உலக மனங்களை வெல்ல முயல்கிறது. இந்த சினிமாக்கள் ஆண்களின் அதீத காமத்தையும் மட்டற்ற பாலியல் வேட்கையையும் வன்மம், துன்புறுத்தல், பலாத்காரம் போன்றவையூடாகத் தீர்த்துக் கொள்வதற்காக பெண்ணுடலை விளையாட்டுப் பண்டமாக்குகிறது. அதற்காக பெண்ணின் உயிர்ப்பான ஆளுமையை நீக்கம் செய்யும் கருத்தியலை நீலப்படங்கள் உருவாக்குகின்றன. இதன்போது அத்துமீறல்கள் யாவும் ஆண்மையின் காம லீலைகள் என்பதான கண்ணோட்டத்தைப் பெறுகிறது. இச்செயலானது நலிவானவர்களைச் சுரண்டிக் கொன்றுண்ணும் அதிகார வர்க்கத்தின் உலகியல் வன்முறை நியாயங்களை தெய்வச் செயல் போல ஏற்றுக் கொள்வதற்கான பண்பாகத் திரள்கிறது. இன்றைய முதலாளித்துவ நரகத்தை இந்தப் படைப்புகள் இயல்பானதெனவும் சிறப்பானதெனவும் ஆசீர்வதிக்கின்றன. இங்கு சுயம் சிதைந்த பெருமகிழ்வினால் நமது கண்கள் குருடாக்கப்பட்டுள்ளன.//
மேலே உள்ள பத்தி பிப்டி ஷேட்ஸ் ஒப் க்ரே நாவலை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது என்றால் BDSM உறவு முறை பற்றிய தெளிவின்மையும்,ஒருபக்கசார்பாக பெண்களுக்காக பரிதாபப்பட்டு பேசும் மனநிலையும் காணப்படுகிறது.உண்மையில் அந்த நாவலில் முதலில் தன்வளர்ப்புத்தாயின் தோழி றொபின்சன் (Robinson) என்பவள் சிறுவன் க்ரிஸ்ட்டின் க்ரே (Christian grey )15 வயதாக இருக்கும்போது தன்னை உடலுறவு கொள்வதற்காக'BDSM' என்னும் உறவு முறையை அறிமுகப்படுத்தி,6 வருடமாக அதன் மூலம் இந்த சிறுவன் துன்புற கிடப்பதும் அதை பார்த்து அந்த பெண் பாலியல் இன்பமுற்றதன் விளைவால் அந்த சிறுவனும் உளவியல் உடலியல் ரீதியாக "பிறரைத்துன்புறுத்தி அந்த வலியின் மூலம் பாலியல் இன்பம் அனுபவித்தல்" (Sexual Sadism Disorder) என்னும் உறவுக்கட்டமைப்பு நோய்க்குள் உள்ளாக்கப்படுகிறான்.

அதன் பிரதிபலிப்பாக சந்திக்கும் பெண்களை தான் அனுபவித்த 'BDSM'என்னும் உறவு நிலைகளில் 'Submissive and Dominant 'என்னும் உறவைத் தேர்வு செய்து பெண்களது பிற உணர்வுகளைபுறக்கணித்து உடல்களுடன் உறவு கொண்டாடி வருவதாக இந்தநாவல் கூறுகிறது.இப்போ இதன் அடிப்படையில் பார்த்தால் முதலில் சிறுவனாக இருக்கும்போது அவனது தாயின் தோழி BDSM உறவை பயன்படுத்தி துன்புறுத்தி அதன்மூலம் இன்பமுற்று வந்திருக்கிறாள்.அதை பற்றி பேசவும் இல்லை.இதற்காக பரிதாபப்படவும் இல்லை.ஏனென்றால் "ஆண் என்பவனுக்கு பெண்ணுடனான காம உறவு எவ்வளவு மோசமானதாக, வன்முறையானதாக இருந்தாலும் கொண்டாட்டமானதுதான்" என்னும் கற்பிதம் சமூக மனங்களில் திணிக்கப்பட்டுள்ளது. மேலும் பெண்ணுக்கு காமமலீலை செயற்பாடானது உளவியல் உடலியல் ரீதியாக இன்பமானதாக இருந்தாலும் சமூகத்தின் பார்வையில் அது ஒரு வன்மமான செயலாகவே கணிக்கப்படுகின்றது.ஏனெனில் ஆண் காமத்தை அனுபவிக்க வரையறைகள் கிடையாது,ஆனால் பெண்ணுக்கு அதிகப்படியான வரையறைகள் உண்டு. BDSM சார்ந்த ஆபாசத்திரைப்படங்களை மேலோட்டமாக நோக்காமல் ஆழமாக பார்க்கும் போது அந்த இடங்களில் பெண்களால் ஆண்கள் எந்த அளவுக்கு துன்புறுத்தப்படுகிறார்கள்,அருவறுப்பானவைகளை அனுபவிக்கிறார்கள் என்பது புரியும். இதனை "Femdom BDSM" வகையினுள் காணலாம்.
Share This:   FacebookTwitterGoogle+

Sunday, May 21, 2017

Emilie Muller : 1993

நடிப்புன்னா என்னான்னு தெரியுமா?

"நடிப்பு ஆர்ட் (Art) .அது ஒரு கலை. அதை பீல் பண்ணி பண்ணனும். அனுபவிச்சு பண்ணனும். யதார்த்தமா இருக்கவேணும். உடல் மொழி (Body Language) ரொம்ப முக்கியம். முகபாவனை (Facial Expression) அதிலும் கவனித்தே ஆக வேண்டிய ஒன்று".

இப்படி நிறைய வார்த்தைகளை நடிக்க தயாராக இருப்பவர்கள் கேட்டிருப்பார்கள். அதை முயற்சி செய்து கொண்டும் இருப்பார்கள். ஆனாலும் நான் பார்த்ததில் அதிகமாக மண்டையில் எதுவுமே இல்லாமல் மைதா மாவு நிறத்தில் அல்லது சுண்டி விட்டால் ரத்தம் தெறிக்கும் நிறத்தில் அதிலும் குறைந்த வயதில் பெண் இருந்தால் நடிக்க வாய்ப்பு கொடுப்பார்கள். அடுத்தது ஒரு பிரபலமான நடிக நடிகையரின் பிள்ளையாக  இருந்தால் வாய்ப்புத்தேடி அலைய வேண்டிய சிக்கல்கள் ஒன்றுமே இல்லை. வீட்டு கதவை அண்டியே இயக்குனர்கள் பாய்விரித்து கிடப்பார்கள். இது போன்ற சப்பையான காரணங்களுக்காகவே பெரும்பாலும் திரைப்பட வாய்ப்புக்கள் கிடைக்கின்றன. நடிகர் நடிகை என்று தாங்களே தங்களை பறை சாற்றிக்கொள்வதுடன் அதற்கு சாம்புராணி புகை போட சில ஊடகங்கள்விளம்பரங்கள் வேறு. எப்படியும் பார்வையாளர்கள் ஏற்றுக்கொண்டுதானே ஆகவேண்டும்.

அடுத்து இன்னும் சில கூட்டம் இருக்கு. அவர்கள் ஒரு நடிகரைப்போல நடிப்பதால்டப் மாஷ் Dub-mash செய்வதால் தானும் நடிக்க தகுதியானவர்கள் என்று ஒரு பிம்பத்தை ஏற்படுத்திக்கொண்டு பிரபலமாகி விட்டதாக கற்பனையில் மிதந்து கொண்டிருப்பார்கள். சரி அது இனி அவரவர் உரிமை. என்னமோ பண்ணுங்க. ஒருவர் செய்வதை போலச்செய்து பின்பற்றுவதில் என்ன புதுமை உண்டு?

உண்மையில் நடிப்புத்துறையில் உள்ளவர் என்னை பொறுத்தவரை ஒரு புத்தாக்க சிந்தனையுடையவராக இருக்க வேண்டும். பட்டப்படிப்பு மேற்கொள்ளாத மேதாவியாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை.நாட்டு நடப்பு ,அல்லது இலக்கியங்கள் சார்ந்தாவது வாசிப்பனுபவம் இருக்கவேண்டும். மனித மனங்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அணுக கூடியவராக இருக்கவேண்டும். அப்போதுதான் திரைக்கதையை உணர்ந்து அதனை ஏற்று நடிக்க முடியும்.உதாரணமாக இந்திய ஹிந்தி மொழி திரைப்படமான பார்ச்ட் (Parched) பலராலும் விமர்சிக்கப்பட்டது.அந்த விமர்சனமானது திரைப்படத்தில் உள்ள கருத்தியல் தொடர்பாக அல்ல.மாறாக ராதிகா ஆப்தேயின் ஆபாசமற்ற "நிர்வாண உடல் காட்சிக்காக" விமர்சிக்கப்பட்டது.கதைக்கருவுக்கு ஏற்றால் போலவே கதாபாத்திரங்கள் பின்னப்பட்டிருந்தும் ஏன் விமர்சனம்? என்று பார்த்தால் இங்கு யாரும் கலையை கலையாக பார்ப்பதில்லை.பெண்ணுடலைப் பார்த்தாலே ஆபாச திரைப்பட வகைக்குள் உள்ளடக்குகின்றனர்.இது ஒரு புறமிருக்க கபாலி திரைப்பட கதாநாயகியாக தமிழில் தோன்றி விட்டு ஹந்தியில் இப்படி நடித்ததன் விளைவாக தமிழில் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.நடிகை ராதிகா ஆப்தேயின் ஊடக பேட்டி நிகழ்ச்சி ஒன்றில் ஊடகவியலாளர் ஒருவர் அத்து மீறிய கேள்விகளை கேட்க அதற்கு ராதிகா ஆப்தேயின் பதில் மிகவும் மெய்சிலிர்ப்பை ஏற்படுத்திற்று. அந்த அளவுக்குத் தான் நடிக்கும் கதையின் கருவை, கதாபாத்திரத்தின் தன்மையினை உணர்ந்து அறிவுப்பூர்வமாக பதிலளித்து இருப்பார்.வெறுமனே உடலியல் காட்சியை காண்பித்தால் பரபரப்பாக பேசப்படும் என்பதற்காகவல்லாம் அந்த கதாபாத்த்திரத்தை ஏற்றிருக்கவில்லை என்பது இங்கே எத்தனை பேருக்கு தெரியுமோ தெரியவில்லை.

தமிழ் திரைப்படங்களைப் பொறுத்தவரை ஒரு கதையை எழுதி அதனை உரியவாறே எடுப்பதென்பது குதிரைக்கொம்புதான்.தணிக்கைக்குழு ,கலாச்சாரம் அது இது என்று கலையையே சிதைத்து விடுவார்கள்.இங்கே நடிகர்களின் அறிவு,சிந்தனை,கதையை ஆழமாக கேட்டு,கதாப்பாத்திர தன்மையுணர்ந்து  படத்திற்கு ஒப்பந்தம் செய்தல் போன்ற நிகழ்வுகள் படு மோசமாகவே உள்ளது.ஏனென்றால் அவ்வாறான சிறந்த கலைப்படத்திற்கு எந்த வணிக,அறிமுகமான முகமும் ஒப்பந்தம் செய்வது கிடையாது.முழுவதும் அலங்காரம் செய்து கொண்டு ஏதோ ஆட்டம் போட்டு விட்டு ஊடகங்களின் முன்னால்  நின்று உதார் விட்டுக்கொண்டு இருக்கின்றது.அதையும் நம் மக்கள் பார்த்து பூரிப்படைகிறார்கள்.  

இவை எல்லாம் ஒரு புறமிருக்கட்டும்.மேலே நான் குறிப்பிட்ட புத்தாக்க சிந்தனையுடைய,வாசிப்பனுபவம், கற்பனை வளம் கொண்ட, இலக்கிய ரசனை உள்ள ஒரு நடிகையை தான் 20 நிமிடங்களை கொண்ட ஒரு பிரென்ச் குறுந்திரைப்படம் எனக்கு அறிமுகப்படுத்தி  திகைப்பில் ஆழ்த்தியது.

Emilie Muller.இந்த குறுந்திரைப்படம் 1993 ஆம் ஆண்டு இயக்குனர் "Yvon Marciao" இனால் உருவாக்கப்பட்டது.இந்த குறுந்திரைப்படத்தை பொறுத்தவரையில் வார்த்தைகளால் மட்டுமே நிரம்பப்பெற்ற ஒரு படைப்பு என்று சொல்லலாம்.சிலருக்கு அதிகமாக பேசுபவர்களை கண்டாலே பிடிக்காது.நிகழ்வுகளாக இருக்கட்டும், நண்பர்களாக இருக்கட்டும்.ஆனாலும் ஒரு சிலரது பேச்சுக்களை ரசனையுடன் அவதானித்து உள்வாங்கிக்கொண்டிருப்போம்.அந்த பேச்சு எப்படி இருக்கும்? சுவாரஷ்யமான ஒன்றாக,புதுமையான ஒன்றாக, சில வேளைகளில் அந்தரங்கமானவையாக, நமக்கு விருப்பமான ஒன்றாக,கற்பனையனவைகளாக கூட இருக்கும்.அந்த சுவாரஷ்யம் எவ்வாறு வார்த்தைகளுக்குள் பின்னப்பட்டு தனது முகபாவனையினூடாக பார்வையாளர்களை ஈர்க்கின்றது என்பதில் தான் பேச்சின் யுக்தி கையாளப்பட்டிருக்கும்.அதிலும் பார்வையாளர்களிடம் வினா விடை அமைப்பில் நிகழும் உரையாடல்கள் என்றுமே உயிர்ப்புடையனவாக இருக்கும்.அந்த ஒரு செயற்பாடுதான் இந்த குறுந்திரைப்படத்திலும் நிகழ்ந்திருக்கும். ஒரு கணம் இக்குறும்பட பாணி எனக்கு Memories Of Machine குறுந்திரைப்பட வினா விடை அமைப்பு மற்றும் பார்வையாளரை நோக்கிய உரையாடல்முறை என்பனவற்றை நினைவூட்டியது..




இக்கதை கருவானது  ஒரு இளம்பெண் நடிகை தேர்வுக்காக சென்று அங்கு இயக்குனரால் கேட்கப்படும் கேள்விகளுக்கு தனது பதிலை தான் பெற்ற அனுபவங்கள் மற்றும் சிந்தனைகளை கொண்டு அவ்விடத்திலேயே கற்பனை செய்து முன்வைப்பதாக காட்சிப் படுத்த பட்டிருக்கும்.
Share This:   FacebookTwitterGoogle+

Blog Archive

Followers

About Me

My photo
"வாழ்வெனும் கங்குலை புரிந்து கொள்ளத்துடிக்கும் மின்மினி இவள்"
Copyright © மின்மினி |